தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாமல் தேர்வெழுதிய +2 மாணவி..!

தந்தையின் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ளாமல் பிளஸ் 2 மாணவி ஒருவர் மன தைரியத்துடன் தேர்வெழுதிய சம்பவம் கமுதியில் அரங்கேறியுள்ளது.

தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாமல் தேர்வெழுதிய +2 மாணவி..!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவருக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் மகள் ஒருவர் இருக்கிறார். மகளுக்கு தற்போது தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சுமை தூக்கும் தொழிலாளியான இவர், நேற்று இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து இறுதிச்சடங்கு நடத்துவதற்காக அவரின் உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவரின் மகளுக்கு இன்று வரலாறு தேர்வு இருந்ததால், தந்தையின் இறுதிச் சடங்கில் கூட கலந்துக்கொள்ளாமல் மனதை கல்லாக்கி கொண்டு மிகுந்த மன தைரியத்துடன் பள்ளிக்கு சென்று தனது தேர்வை எழுதினார்.