மக்களே உஷார்...!கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு...எந்தெந்த இடங்கள் தெரியுமா?

மக்களே உஷார்...!கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு...எந்தெந்த இடங்கள் தெரியுமா?

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வலுவிழந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி:

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று வலுவிழந்து வடதமிழகம்,புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள்:

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க: கூட்டணி மாறுகிறாரா ஸ்டாலின்?

நாளை கனமழைப் பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள்:

நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாகவும் இருக்கும். ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை  பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 44 செண்டி மீட்டர் மழைபெய்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொருத்தவரை வட தமிழக கடலோரப்பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள்,   தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் வலுவிழந்து காணப்படும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழக கேரள பகுதிகளைக் கடந்து அரபிக் கடல் பகுதிக்கு செல்லக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.