குளிக்கச் சென்று கிணற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர்....!

மணப்பாறை அருகே குளிக்கச் சென்று கிணற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர்....

குளிக்கச் சென்று கிணற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர்....!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (19). இவர் திருச்சி ஈ.வெ.ரா., கல்லூரியில் முதலாம் ஆண்டு விலங்கியல் படித்து வருகிறார். நேற்று மாலை இவர் தனது அண்ணன் லட்சுமணபெருமாள் மற்றும் நண்பர்கள் இருவருடன் அதே பகுதியில் உள்ள பொன்னுச்சாமி என்பவரது தோட்டத்தில் உள்ள பாசன கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். நீச்சல் தெரியாத லோகநாதன் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். 

அந்த கிணற்றின் ஆழம் 70 அடி என்பதாலும், 60 அடிக்கும் மேல் தண்ணீர் நிறைந்திருந்ததாலும் உடனடியாக லோகநாதனை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினரும் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் மின் மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றி லோகநாதனை மீட்க முடிவு செய்து மின் மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மணப்பாறை வட்டாட்சியர் கீதாராணி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.