ஆட்சியர் அலுவலகம் முன்பு 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி- கிருஷ்ணகிரியில் பரபரப்பு

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு இரு பெண் பிள்ளைகளுடன் தாய் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்சியர் அலுவலகம் முன்பு 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி- கிருஷ்ணகிரியில் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னமடம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுமதி. இவருடைய கணவர் பாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  சாலை விபத்தில் உயிரிழந்தார். சுமதிக்கு தீபிகா, பிரியங்கா ஆகிய இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இதற்கிடையில் இவர்களுக்கு சேரவேண்டிய 1.70 ஏக்கர் நிலத்தை இறந்துபோன பாலகிருஷ்ணனின் அண்ணன் பிரபாகரன் அபகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தங்களுக்கு சேரவேண்டிய 1. 70 ஏக்கர் நிலத்தினை கொடுத்துவிடுமாறு பாலகிருஷ்ணனின் மனைவி கேட்டுள்ளார். அதற்கு பாலகிருஷ்ணனின் அண்ணன் நிலம் ஏதும் கொடுக்க முடியாது என கூறி மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சுமதி இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவினை கொடுக்க வந்துள்ளார். அப்போது தீடிரென ஆட்சியர் அலுவலகம் முன்பாக சுமதி மற்றும் தனது இரு மகளுடன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார், அப்போது அங்கு இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி மூன்று பேரையும் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.