அதிமுக பொதுக்குழு : உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு மேல்முறையிடு!

அதிமுக பொதுக்குழு : உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு மேல்முறையிடு!

கடந்த 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அதற்கு முன்தினம் பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன், அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார். விடிய விடிய நடந்த விசாரணைக்குப் பின்பு அதிமுக பொதுக்குழு நடத்தலாம் என்றும், ஆனால் 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றக் கூடாது என தீர்ப்பளித்திருந்தனர்.

நடந்த அதிமுக பொதுக்குழுவில் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அடுத்த பொதுக்குழு ஜூலை 11 அன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டம் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திலேயே பொதுக்குழு கூட்டத்தை நடத்த அதிமுக முடிவு செய்திருப்பதாக தற்போது தான் தகவல் வெளியானது.

இந்நிலையில், அதிமுக பொதுகுழுவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்த நீதிமன்றம்.. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் புதிய தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவுவிட்டுள்ளது.

இந்நிலையில், பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு மேல்முறையிடு செய்துள்ளது.