சிறுபான்மையினர் மக்களை ஏமாற்றும் கட்சி அதிமுக அல்ல... இபிஎஸ்!!

சிறுபான்மையினர் மக்களை ஏமாற்றும் கட்சி அதிமுக அல்ல... இபிஎஸ்!!

அதிமுகவிற்கும், சிறுபான்மை மக்களுக்கும் இடையேயான உறவை யாராலும் பரிக்க முடியாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.  அதை தொடர்ந்து பேசிய அவர், சிறுபான்மை மக்களின் அரணாக அதிமுக என்றும் விளங்கி வருவதாகவும், சில கட்சிகளை போல பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, சிறுபான்மையினர் மக்களை ஏமாற்றும் கட்சி அதிமுக அல்ல எனவும் தெரிவித்தார். 

மேலும், கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என்றும் கொள்கை என்பது ஒருவருடைய இன்சியல் போல அதை ஒருபோதும் மாற்ற முடியாது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:    “48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால்...” அண்ணாமலைக்கு எச்சரிக்கை!!