நிரம்புகிறது ஆழியாறு அணை - வெள்ள அபாய எச்சரிக்கை  

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்ததால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிரம்புகிறது ஆழியாறு அணை - வெள்ள அபாய எச்சரிக்கை   

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்ததால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த நிலையில், 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டு முதல்முறையாக 110 அடியை எட்டியுள்ளது.

நீர்வரத்து தொடர்ந்து  அதிகரித்து வருவதால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.