மூச்சுத்திணறல் காரணமாக சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி...

பள்ளி மாணவிகள் மற்றும் பெண் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூச்சுத்திணறல் காரணமாக சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி...

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி நிறுவனரான சிவசங்கர் பாபா, அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து மாணவிகள் 3 பேர் நேரடியாக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், டெல்லி காசியாபாத்தில் பதுங்கியிருந்த  சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து  செங்கல்பபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் காவலில் வைக்க  நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.  

இதனிடையே  கேளம்பாக்கத்தில் உள்ள சொகுசு பங்களா உள்ளிட்ட இடங்களுக்கு சிவசங்கர் பாபாவை அழைத்து   சென்று சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதனால் அவரை  மருத்துவமனையில் அனுமதித்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்  சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.