திருச்செந்தூர் முருகன் கோவில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் சேகர் பாபு  தலைமையில் சென்னையில் நடைபெற்றது. 

திருச்செந்தூர் முருகன் கோவில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் சேகர் பாபு  தலைமையில் சென்னையில் நடைபெற்றது. 

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் மாலை முரசு நிர்வாக இயக்குனரும், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தக்காருமான இரா.கண்ணன் ஆதித்தன் பங்கேற்றார். அவருக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தார். கூட்டத்தில் திருக்கோயில் வளர்ச்சி பணிகள் மற்றும் கும்பாபிஷேகம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.