பிஎஸ்பிபி பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர ஆலோசனை... அமைச்சர் அன்பில் மகேஷ்

பிஎஸ்பிபி பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர ஆலோசனை... அமைச்சர் அன்பில் மகேஷ்

பிஎஸ்பிபி  பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர ஆலோசனை... அமைச்சர் அன்பில் மகேஷ்
பிஎஸ்பிபி பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர ஆலோசனை... அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னையில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிஎஸ்பிபி பள்ளியை மாநில அரசின் கட்டுபாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

 பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சரிடம் சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த சம்பவம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் 'இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் மூலம் துறை ரீதியான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. குழு அமைத்து ஓரிரு தினங்களில் விளக்கம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி, அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்தார்

அதேபோல் போலீசாரால் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்,பிரச்சினைக்குரிய அந்த பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.