சென்னை விமான நிலையத்தில் 75வது சுதந்திர தின விழா

சென்னை விமான நிலையத்தில் 75வது சுதந்திர தின விழா

இந்தியா முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி,சென்னை விமான நிலையத்தில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அணிவகுப்பு நடந்தது.

இந்நிகழ்ச்சியில் விமான நிலைய உயர் அதிகாரிகள் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐஜி ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.