இரண்டு தவனை தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே மது வழங்கப்படும் ........... நாமக்கல்லில் அதிரடி....மதுபிரியர்கள் அதிர்ச்சி

நாமக்கல்லில் இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என போர்டு எழுதி வைக்கப்பட்டுள்ளது, மதுபிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு தவனை தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே மது வழங்கப்படும் ........... நாமக்கல்லில் அதிரடி....மதுபிரியர்கள் அதிர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 65 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். சுமார் 3 லட்சம் பேர் வரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு வருபவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என போர்டு எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து கடைக்கு வந்த குடி மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தடுப்பூசி செலுத்ததாத நபர்கள் மது வாங்க முடியாமல் தவித்தனர்.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்ட போது, பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பூசி குறித்து மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும்  மேலும் டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.