களப்பணியாற்றும் காவலர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க நிதி ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவு...

கொரோனா காலத்தில் களப்பணியாற்றும் காவலர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க, 58 கோடியே 59 லட்ச ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

களப்பணியாற்றும் காவலர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க நிதி ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவு...

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பணியாற்றி வரும் காவல் துறையினர், தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, காவலர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க, 58 கோடியே 59 லட்ச ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,

இதன் மூலம் காவல்துறையில் பணியாற்றி வரும் 2-ம் நிலை காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 போலீசார் பயன் பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.