அம்பேத்கரும், பெரியாரும் நாணயத்தின் இருபக்கங்கள்... ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேச்சு...

அம்பேத்கரும் பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள், பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார் முதல்வர்  மு.க. ஸ்டாலின் என்றார்.

அம்பேத்கரும், பெரியாரும் நாணயத்தின் இருபக்கங்கள்... ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேச்சு...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா 2021 சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடை பெற்றது.  இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவிற்கு பெரியார் ஒளி, பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு காமராஜர் கதிர், பி.வி.கரியமாலுக்கு அயோத்திதாசன் ஆதவன் விருது, பஷிர் அகமதுக்கு காயிதே மில்லத் பிறை விருதும், மொழியிலாளர் இராமசாமிக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, 

இரண்டாவது விடுதலையை வாங்கி தந்த சிங்கம் நீங்கள் என முதலமைச்சருக்கு நெல்லை கண்ணன் புகழாரம் சூட்டியுள்ளார். ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சமூக நீதியை பாதுகாக்க என்றும் உறுதுணையாக முதல்வர் அவர்கள் இருப்பார். அம்பேத்கரும் பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள், பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார் முதல்வர்  மு.க. ஸ்டாலின் என்றார்.