"டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் போலி மதுபானங்களால் மரணங்கள்" அண்ணாமலை குற்றச்சாட்டு!

"டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் போலி மதுபானங்களால் மரணங்கள்" அண்ணாமலை குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் போலி மதுபானங்களால் மரணங்கள் தொடர்கின்றன என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் டாஸ்மாக்கிலிருந்து கள்ளச் சந்தையில் மது வாங்கி குடித்த இருவர் இன்று காலை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதனை கண்டித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "கள்ளச் சாராயத்தைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் போலி மதுபானங்களால் மரணங்கள் தொடர்கின்றன" என தெரிவித்துள்ளார். மேலும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு போராட்டம் நடைபெற வேண்டுமா என்பதை முதலமைச்சர் முகஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும் என எச்சரித்துள்ள அவர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக  சார்பாக வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க:கள்ளசந்தையில் மதுபானம் வாங்கிக்குடித்த இருவர் பலி!!!