தமிழக அரசை குறைகூறுவதே அண்ணாமலையின் வாடிக்கை - அமைச்சர் நாசர் குற்றம் சாடல்!

சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசை குறைகூறுவதே அண்ணாமலையின் வாடிக்கை என அமைச்சர் நாசர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக அரசை குறைகூறுவதே அண்ணாமலையின் வாடிக்கை - அமைச்சர் நாசர் குற்றம் சாடல்!

தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசர் நாமக்கல்லை அடுத்த லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிலையம் மற்றும் புதியதாக பால் பண்ணை அமையவுள்ள இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தினசரி 2 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அப்போது, அமைச்சர்கள் மீது பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் புகார்களை கூறி வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஆவின் நிறுவனம் இதுவரை ஹெல்த் மிக்ஸ் பவுடர் தயாரித்தது இல்லை என குறிப்பிட்டார்.  மேலும், அண்ணாமலை உண்மைக்குப் புறம்பாக பேசி வருவதாக குற்றம்சாட்டிய அமைச்சர், சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசை குறைகூறுவதே அவருக்கு வாடிக்கை எனவும் விமர்சித்தார்.