பூங்காவினுள் நுழைந்த சமூக விரோதிகள்... 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் உடைப்பு...

கிருஷ்ணகிரி அருகே பயன்பாட்டிற்கு வராத பூங்காவினுள் நுழைந்து பொருட்களை உடைத்த சமூக விரோதிகள்

பூங்காவினுள் நுழைந்த சமூக விரோதிகள்... 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் உடைப்பு...
கிருஷ்ணகிரி அருகே 30 லட்சம் ருபாய் மதிப்பில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராத அம்மா பூங்காவினுள் நுழைந்த சமூக விரோதிகள் சுமார் 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.  போச்சம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட காவேரிப்பட்டிணம் சாலையில் கடந்த 2018- ஆண்டு சுமார் 30 லட்சம் மதிப்பிள் அம்மா பூங்கா ஒன்று கட்டப்பட்டது. இந்த பூங்கா கட்டிமுடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இந்த பூங்காவினுள் நுழைந்த சமூக விரோதிகள் சிலர் அங்குள்ள  பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். மேலும் சமூக விரோதிகளின் இந்த செயல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  சேதப்படுத்திய பொருட்களை சீர்படுத்தி பொது மக்களின் பயன்பாட்டிற்கு பூங்காவினை கொண்டு வர வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.