ஆதாரம் இல்லாமல் குறை கூறினால் தகுந்த பதிலடி... பாஜகவுக்கு அமைச்சர் சேகர் பாபு எச்சரிக்கை...

ஆதாரம் இல்லாமல் குறை கூறினால் பாஜகவுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

ஆதாரம் இல்லாமல் குறை கூறினால் தகுந்த பதிலடி...  பாஜகவுக்கு அமைச்சர் சேகர் பாபு எச்சரிக்கை...

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் திருத்தேர் வீதியுலாவை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு கோயில்களில் நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் பணி நடைப்பெற்று வருவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் குறைகளை சுட்டிக்காட்டி இருந்தால்  பாஜக நடுநிலையான கட்சி என கூறலாம், எனவே ஆதாரம் இல்லாமல் குறை கூறினால் அதற்கு தகுந்த முறையில் பதிலடி தரப்படும் எனவும் தெரிவித்தார்.