நீட் தேர்வுக்கு முறையான பயிற்சிகள் வழங்க ஏற்பாடு: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நீட் தேர்வுக்கு முறையான பயிற்சிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வுக்கு முறையான பயிற்சிகள் வழங்க ஏற்பாடு: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான குடல் இரைப்பை உள்நோக்கி மருத்துவ கருவிகள் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் , அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறினார். மேலும் நீட் தேர்வுக்கு முறையான பயிற்சிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதைத்  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, கோவையை போன்று திருச்சியை சிறந்த நகரமாக மாற்ற ஏற்பாடுகள் நடைபெற்று  வருவதாக கூறினார். மேலும் திருச்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும்  தெரிவித்தார்.