பாலியல் வழக்கில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்...

பயிற்சி வீராங்கனைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான தடகளப் பயிற்சியாளர் நாகராஜனை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பாலியல் வழக்கில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்...

சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர்  அளித்த பாலியல் புகாரில் நாகராஜன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட நாகராஜனை ஜுன் 11ஆம் தேதி வரை காவலில்  வைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து  சிறையில்  அடைக்கப்பட்டார். இதனிடையே  நாகராஜனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  போலீஸார் அனுமதி கோரியpருந்த நிலையில்  நீதிபதி முகமது பாரூக், 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.