அத்தைக்கு மீசை முளைக்கட்டும் சித்தப்பா என பெயர் வைக்கலாம்....அண்ணாமலையை விமர்சித்த அமைச்சர் சேகர்பாபு...!

பாஜக 2026 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதற்கு, அத்தைக்கு மீசை முளைக்கட்டும் சித்தப்பா என பெயர் வைக்கலாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அமைச்சர் சேகர்பாபு  விமர்சித்துள்ளார்

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் சித்தப்பா என பெயர் வைக்கலாம்....அண்ணாமலையை விமர்சித்த அமைச்சர் சேகர்பாபு...!

சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சேப்பாக்கம் பகுதி சார்பில் திமுக மூத்த முன்னோடிகள் 100 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது 

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியை வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

அடுத்தஅரை நூற்றாண்டுக்கு திமுக தலைவருக்கு தோள் கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின்  இருக்கிறார்கள் என்றார்.

பாஜக 2026 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொல்லியிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அத்தைக்கு மீசை முளைக்கட்டும் சித்தப்பா என பெயர் வைக்கலாம்
இது திராவிட மண் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்தார்.

கலைஞர் உணவகம் திட்டம் குறித்து ஓ. பன்னீர்செல்வம் கருத்துக்கு இன்னார் இனியவர்களுக்கு என்று பார்ப்பதில்லை, ஏற்கனவே அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதிய திட்டம் தான் கலைஞர் உணவக திட்டம், இருக்கின்ற திட்டத்தை எடுக்கும் திட்டம் இந்த ஆட்சியில் இல்லை எனவும்  அதுபோன்ற காழ்ப்புணர்ச்சி கொன்ற முதல் அமைச்சரும் தமிழக முதலமைச்சர் இல்லை என்று அமைசர் சேகர்பாபு குறிப்பிட்டார்.