காலில் செருப்புகூட அணியாமல் சட்டப்பேரவைக்கு வந்த பாஜக எம்.எல்.ஏ..!!
தமிழக சட்டப்பேரவைக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தி, காலில் செருப்புகூட அணியாமல் சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தேர்தலில் 20 இடங்களில் பாஜக போட்டியிட்டது. அதில் கோவை தெற்கு, நாகர்கோவில், திருநெல்வேலி, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றியை தழுவினர். சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபையில் பாஜக உறுப்பினர்கள் நுழைந்துள்ளனர்.
இந்நிலையில், ஜூன் 21 ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள், தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நாகர்கோவில் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ காந்தி சட்டப்பேரவைக்கு காலில் செருப்புகூட அணியாமல் சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
எளிமையாக இருப்பது மட்டுமின்றி கட்சி பாகுபாடுகளைக் கடந்து, அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு மனிதராக எம் ஆர் காந்தி அறியப்படுகிறார். சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் (ஜூன் 24) நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.