இது தான் இறுதி வாய்ப்பு: மிஸ் பண்ணிடாதிங்க! பாரதியார் பல்கலை. அறிவிப்பு

தொலைதூரக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தான் இறுதி வாய்ப்பு: மிஸ் பண்ணிடாதிங்க! பாரதியார் பல்கலை. அறிவிப்பு

தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களில் இதுவரை கட்டணம் செலுத்தாதோர், தங்கள் மதிப்பெண் சான்றிதழ்கள், படிப்பு முடித்ததற்கான சான்று உள்ளிட்டவற்றை அபராதத்துடன் உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என மாணவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், பேரிடர் சூழலில், மாணவர்கள் கட்டணம் செலுத்தாவிட்டாலும், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுவரை கல்விக்கட்டணம், தேர்வுக் கட்டணத்தை செலுத்தாதோர், அபராதத்துடன் அதை செலுத்தி தங்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், 50,000-க்கும் மேற்பட்ட தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்தாத நிலையில் இனியும் அவற்றை செலுத்தாவிட்டால், மேற்கொண்டு அவர்கள் தேர்வு எழுதவும், படிக்கவும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.