தமிழ் நாடு முழுவதும் கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும்....!!!

தமிழ் நாடு முழுவதும் கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும்....!!!

கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்றால், தமிழ்நாடு முழுவதும் கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என தமிழ்நாடு நாடார் பேரவையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூரில் தமிழ்நாடு நாடார் பேரவையின் கரூர் மாவட்டம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில தலைவர் என் ஆர் தனபாலன் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து, சிறப்புரை ஆற்றினார்.  பின்னா் செய்தியாளா்களை சந்தித்து பேசிய அவா், கள்ளு கடை திறந்தால் அயல் நாட்டு மதுபானங்கள் விற்பனையாகாது என பயந்ததால் தான் கள் கடைகளுக்கு அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர் எனக் கூறினார்.  மேலும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்றால், தமிழ்நாடு முழுவதும் கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு நாடார் பேரவையினா் கோரிக்கை விடுத்துள்ளனா். 

இதையும் படிக்க: விற்பனையாளரை தாக்கிய குடிமகன்...!!