அரசு மருத்துவமனையில் தாய்பால் வார விழா... முன்னாள் அமைச்சர் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினார்...

சென்னையில் தனியார் தங்கும் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், அதிர்ஷ்டவசமாக 20 பேர் உயிர் தப்பியுள்ளனர். 

அரசு மருத்துவமனையில் தாய்பால் வார விழா... முன்னாள் அமைச்சர் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினார்...

தென்காசி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்களை முன்னாள் அமைச்சர் பூங்கோதை வழங்கினார். 
 
தென்காசி  அரசு  மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.  இதில், முன்னாள் அமைச்சர் பூங்கோதை கலந்து கொண்டு, குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். இதில், பூண்டு, பாதாம், முந்திரி,பெரீச்சம்பழம் போன்ற சத்தான உணவுப் பொருடகள் வைக்கப்பட்டிருந்தன.  

அத்துடன் குழந்தைகளுக்கு  தேவையான சங்கு, பால் டப்பா உள்ளிட்ட பொருட்களையும்,  அமைச்சர், தாய்மார்களிடம்  வழங்கினர். இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லீன், மருத்துவர் கீதா,  தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் ராமையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.