திமுக ஆட்சியில் வணிகர்களுக்கு பாதுகாப்பு இல்லை - எடப்பாடி குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் வணிகர்களுக்கு பாதுகாப்பு இல்லை - எடப்பாடி குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றசம் சாட்டியுள்ளார். 

வணிகர் தினத்தை ஒட்டி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பில் 40வது வணிகர் தின விழா செங்கல்பட்டு அருகே நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும், கஞ்சா கும்பல், வியாபாரிகளை தாக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க : புதுக்கோட்டை: விரைவில் சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் ஐயனார் கோயில்...!

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் பேருந்துகளின் எண்ணிக்கையை திமுக அரசு குறைத்துள்ளதாக கூறிய அவர், மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் என்று அறிவித்துவிட்டு, பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா என்றும் கேள்வி எழுப்பினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதாகவும், தமிழ்நாடு அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் புகார் தெரிவித்தார்.