செருப்பால் அடித்துக் கொண்ட வேட்பாளர்கள்... முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு...

முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டி 2 வேட்பாளர்கள் ஒருவருக்கு ஒருவர் செருப்பால் அடித்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செருப்பால் அடித்துக் கொண்ட வேட்பாளர்கள்... முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு...

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சாவடி மையம் அருகில் வேட்பாளர்கள் இருவர்,  காவல்துறையினர் முன்னிலையில் செருப்பால் அடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காட்பாடி மெட்டுக்குளம் ஊராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

இதில், மெட்டுக்குளம்  ஒன்பதாவது வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் பக்தா மற்றும் சுகுணா இருவரும் முறைகேடு செய்துள்ளதாக ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி குற்றம் சாட்டினர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும், ஒருவருக்கொருவர் காவல்துறையினர் முன்னிலையில் செருப்பால் அடித்துக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.