9 மாவட்ட  ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடக்கம்...

தமிழகத்தில் 9 மாவட்ட  ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான, வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.

9 மாவட்ட  ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடக்கம்...

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.அக்டோபர் 6மற்றும் 9 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. அலுவலக நாட்களில் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 22ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும், அதற்கு அடுத்த நாளே வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, அக்டோபர் 12ம் தேதி நடைபெறும்.இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்பமனு இன்று முதல் பெற்றப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் மாவட்ட செயலாளர் அல்லது அண்ணா அறிவாலயத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.