மரணத்துக்கு பிறகும் கூட சாதி  மனிதனை விடவில்லை...

மரணத்துக்கு பிறகும் கூட சாதி  மனிதனை விடவில்லை என சென்னை உயர் நீதிமன்ற வேதனை தெரிவித்துள்ளது.

மரணத்துக்கு பிறகும் கூட சாதி  மனிதனை விடவில்லை...

 மரணத்துக்கு பிறகும் கூட சாதி  மனிதனை விடவில்லை என சென்னை உயர் நீதிமன்ற வேதனை தெரிவித்துள்ளது.

மரணத்துக்கு பிறகும் கூட சாதி  மனிதனை விடவில்லை என வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடல்களை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு ஒன்றில், மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.   கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்த நீதிபதி, மயானம் என அறிவிக்கப் படாத பகுதிகளில் உடல்களை தகனம் செய்யவோ அடக்கம் செய்யவோ அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

மரணம் அடைந்த பிறகும்கூட சாதி ஒரு மனிதனை விடவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது எனவும், இப்படிப்பட்ட ஒரு மோசமான ஒரு நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம் எனவும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.