உலகம் முழுவதும் செவிலியர் தினம் கொண்டாட்டம்.. 11,000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி!

உலக செவிலியர் தினமான இன்று தமிழகம் முழுவதும்  11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி, கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

உலகம் முழுவதும் செவிலியர் தினம் கொண்டாட்டம்.. 11,000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி!

உலகம் முழுவதும் இன்று செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல், தமிழகம் முழுவதும் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் கருப்புப் பேட்ச் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து சேவை செய்த தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என செவிலியர் சங்க மாநில பொதுச்செயலாளர் அம்பேத்கர் கணபதி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.