டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு...

டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு...

இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, மதுரை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழையும், கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழையும், நாளை மறுநாள், டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,  புதுக்கோட்டை  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், 

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்  பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 20ஆம் தேதி அன்று தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.