இன்று முதல் இரண்டு தினங்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு...

இன்று முதல் இரண்டு தினங்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு...

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் இரண்டு தினங்களுக்கு இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

தமிழகத்தில் நேற்றுடன் கத்திரி வெயில் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் தமிழக மாவட்டங்களின் சில இடங்களில் இன்று முதல் இரண்டு தினங்களுக்கு இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  

மேலும், ஜுன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் தமிழக மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.

மேலும்,  அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்தில் மதுரை, திருச்சிராப்பள்ளி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 40 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என கூறியுள்ளது.