2 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு...   சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

தமிழகத்தில் இன்று முதல் 2 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு...   சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கன மழையும் ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கன மழையும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சிபுரம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் கூறியுள்ளது.