விருதுகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!!!

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொடியேற்றிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், விருதுகள் வழங்கினார்.

விருதுகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!!!
சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், பல்வேறு தரப்பினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
 
குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதுடன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார். இதனை பெற்றுக்கொண்ட அவர் கூடுதலாக தனது மாத வருவாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து அதனை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார். மற்ற விருதுகள் குறித்த தகவ்ல்களைப் பார்ப்போம்!

ஏ.பி.ஜெ அப்துல் காலம் விருது - ஆய்வாளர் இன்னாசி முத்து

கல்பனா சாவ்லா விருது - திருமதி. ப.எழிலரசி

முதல்வரின் முகவரித் துறை விருது - எஸ்.லட்சமி பிரியா

முதலமைச்சரின் நல் ஆளுமை விருது - திருமதி. சங்கீதா வீரசந்தானம்

காவல் கரங்கள், முதியோர், இயலாதோர் மறுவாழ்வு பரிசு - சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் IPS

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்ததற்கான விருது - மருத்துவர் மரு.ப.ஜெயகணேஷ் மூர்த்தி

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த பங்களிப்பை கொடுத்து வரும் தொண்டு நிறுவனம் விருது - ரினைசன்ஸ் அறக்கட்டளை, புதுக்கோட்டை

பெண்களில் சிறந்த சமூக சேவகர் - முனைவர் ஜி.பங்கஜம்

இதனைத் தொடர்ந்து, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த மாநகராட்சி: சேலம் - மேயர் A.ராமச்சந்திரன்

சிறந்த நகராட்சி:

முதல் பரிசு -ஸ்ரீவில்லிபுத்தூர்

இரண்டாம் பரிசு - குடியாத்தம் மூன்றாம் பரிசு - தென்காசி

பின், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது விஜயகுமார், முகமது ஆசிக், வேலூர் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு வழங்கப்பட்டது

மேலும், சுதந்திர தின நல் ஆளுமை விருதுகள்,எ மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கு தமிழ்நாடு அரசு விருதுகளையும் முதலமைச்சர் வழங்கினார். சுதந்திர தின நல் ஆளுமை விருதுகள்,எ மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கு தமிழ்நாடு அரசு விருதுகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, விழாவில், கொரோனா தடுப்பு பணிக்கான சிறப்பு பதக்கம் உள்ளிட்ட விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இறுதியாக விருது பெற்ற அனைவரும் முதலமைச்சருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.