ஆணைகளில் இருந்து விலக்கு அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

ஆணைகளில் இருந்து விலக்கு அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

நூல்களுக்கு தரக் கட்டுப்பாட்டு ஆணைகளில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

செயற்கை இழைகள் மற்றும் விஸ்கோஸ் இழைகளுக்கு தரக் கட்டுப்பாட்டு ஆணைகளால் கட்டாய சான்றிதழ் பெறும் நடைமுறை தொடர்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.  அதில், தொடர்ச்சியான ஆராய்ச்சிகளால் விஸ்கோஸ் மற்றும் பாலியஸ்டர்கள் நூல்களில் தனித்துவ பண்புகளைக் கொண்ட இழைகளின் கண்டுபிடிப்பு சாத்தியமாகி வரும் நிலையில், இத்தகைய இழைகளுக்கு பொதுவான தரக்கட்டுப்பாட்டு ஆணைகள் பொருந்தாது எனவும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  

அதனோடு நூல்களுக்கு தரக் கட்டுப்பாட்டு ஆணைகளில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிக்க:  ஏடிஎம் மது விற்பனை - இபிஎஸ் கண்டனம்...!!!