மக்கள் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் ஸ்டாலின்..!!

மக்கள் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் ஸ்டாலின்..!!

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று கொண்டு தமிழ்நாடு அரசு தீபாவளி மறுநாள் விடுமுறை அறிவித்துள்ளது. 

இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அக்டோபர் 25ஆம் தேதி விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 19ம் தேதி வேலை நாளாக இருக்கும் என அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மக்கள் தீபாவளியை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!!!