ஆம்பூரில் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்... 

ஆம்பூரில் காவல் நிலையத்தை நூற்றுக்கும் மேற்பட்ட அடகு கடை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆம்பூரில் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்... 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஷராப் பஜார் பகுதியில் உள்ள ஒரு நகை அடகு கடையில் திருட்டு நகை அடமானம் வைக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அந்த கடைக்கு ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணைக்கு சென்றுள்ளனர். அப்போது கடை உரிமையாளரை போலீசார் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட அடகு கடை நகைக் கடைகளை அடைத்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தையும் முற்றுகையிட்ட கடை வியாபாரிகள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.