மீனவர்கள் படகு மீது கடலோர காவல்படை கப்பல் மோதி விபத்து...

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மீனவர்களின் படகு மீது கடலோர காவல்படையின் ரோந்து கப்பல் மோதியதில் 2 மீனவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்கள் படகு மீது கடலோர காவல்படை கப்பல் மோதி விபத்து...

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மீனவர்களின் படகு மீது கடலோர காவல்படையின் ரோந்து கப்பல் மோதியதில் 2 மீனவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த தவமணி என்பவர் தனது படகில், அதே பகுதியை சேர்ந்த செல்லமணி, மகாலிங்கம், சந்திரகுமார் ஆகியோருடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். இரவு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த கடலோர காவல்படையின் ரோந்து கப்பல் படகு மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த மீனவர்கள் செல்லமணி மற்றும் மகாலிங்கம் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றது. இந்த விபத்து தொடர்பாக கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.