55 குவாரிகளையும் ஆய்வு செய்ய குழு அமைப்பு - நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்

55 குவாரிகளையும் ஆய்வு செய்ய குழு அமைப்பு - நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்

நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளையும் ஆய்வு செய்ய வெளிமாவட்ட அதிகாரிகளை கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளத்தில் விபத்து ஏற்பட்டு 4 நபர்கள் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், இன்று காலை குவாரிபகுதியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இந்த குவாரியில் நடந்த விபத்தின் தொடர்ச்சியாக  மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்ய  6 சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த சிறப்புகுழுவில் இடம்பெற்றுள்ள பிற மாவட்ட அதிகாரிகள், குவாரிகளில் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளதாக தெரிவித்தார்.