வடமாநில இளைஞர்கள் விரோதி என கூறும் சீமான் சாட்டை துரைமுருகன் மீது காவல் ஆணையரகத்தில் புகார்!!!!

வடமாநில இளைஞர்கள் விரோதி என கூறும் சீமான் சாட்டை துரைமுருகன் மீது  காவல் ஆணையரகத்தில் புகார்!!!!

.

வடமாநிலத்தவர் குறித்து சர்ச்சை கருத்து

வடமாநில இளைஞர்கள் குறித்து எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை திருமுருகன் பேசி வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மக்கள் அதிகாரத்தினர் இன்று சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தனர். 

அதிகாரம் இயக்கத்தின் மாநில செயலாளர் வெற்றிவேல் செழியன்

புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் அதிகாரம் இயக்கத்தின் மாநில செயலாளர் வெற்றிவேல் செழியன், வடமாநில இளைஞர்கள் பலர் தங்களது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தமிழகத்தில் வந்து வேலை பார்த்து வருகின்றனர் எனவும் அவர்களை அடித்து துரத்த வேண்டும் என எப்போதும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் பேசி வருவதாகவும் தெரிவித்தார். 

 இதையும் படிங்க| ஈரோட்டில் வெற்றி அடையவேண்டும் என தேர்தல் பொறுப்பாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்திய இபிஎஸ்

 நாதக பொதுக்கூட்ட மேடையில்  இனவெறியை தூண்டுதல் 

குறிப்பாக, நாம் தமிழர் கட்சி நடத்தும் பொதுக்கூட்ட மேடைகளில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையிலும் ஒரே இடத்தில் வேலை செய்யும் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் போக்கை உருவாக்கும் வகையில் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் பேசி வருவதாகவும் தெரிவித்தார். 

25 கிலோ கஞ்சா

தொடர்ந்து பேசிய அவர், வடக்கன் வரும்போதே 25 கிலோ கஞ்சாவோடு வருகிறான். பகலில் வேலை பார்த்துவிட்டு இரவில் கஞ்சாவிற்கிறான் என சீமான் தொடர்ச்சியாக பேசி வருவதாகவும், இதனால் தமிழ்நாட்டில் வட மாநில இளைஞர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மையை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோர் ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். 

வட மாநில இளைஞர்களை விரோதிகள் போல் காண்பிக்கும் சீமான்

வட மாநில இளைஞர்களை விரோதிகள் போல் காண்பிக்கும் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோர் மீது காவல்த்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து நாம் தமிழர் கட்சிக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வெற்றிவேல் செழியன் தெரிவித்தார்.