பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு பாடைகட்டி ஒப்பாரி வைத்த பெண்கள்...

தஞ்சை அருகே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு பாடைகட்டி ஒப்பாரி வைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து  இருசக்கர வாகனத்திற்கு பாடைகட்டி ஒப்பாரி வைத்த பெண்கள்...

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய அளவில்  மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகில்  உள்ள அருந்தவபுரம் கிளை அஞ்சலகம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அம்மாபேட்டை ஒன்றியம் சார்பில் இரு சக்கர வாகனத்திற்க்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.