உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த தங்கம் பறிமுதல்...

சார்ஜா மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.23 லட்சத்தி 53 ஆயிரம் மதிப்புள்ள 466 கிராம் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த தங்கம் பறிமுதல்...

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜா மற்றும் துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்

அப்போது 2 பேர் அதிகாரிகளின் சோதனையில் இருந்து தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்திய போலீசார், சந்தேகத்தின்பேரில் இருவரிடம் விசாரணை மேற்க்கொண்டனர்.

அதில் இருவரும்  முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனர். அப்போது  உள்ளடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

மறைத்து வைத்து எடுத்து வந்த தங்கத்தின் மதிப்பு ரூ.23 லட்சத்து 53 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.