தமிழகத்தில் மெல்ல அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா பாதிப்பு  

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மெல்ல அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா பாதிப்பு   

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து நாள்தோறும், மாநில சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. இதன்படி நேற்று ஒர நாளில், ஆயிரத்து 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 42 ஆயிரத்து 30 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், நேற்று தமிழகத்தில்  தொற்று பாதிப்பில் இருந்து ஆயிரத்து 565 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 288 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்றைக் கண்டறிய ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 804 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் நேற்று மேலும் 196 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 483 ஆக உள்ளது.