தமிழகத்தில் 5வது நாளாக 5ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஐந்தாவது நாளாக ஐந்தாயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தில்  5வது நாளாக 5ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 230 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து, 36 ஆயிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 97 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை தொற்று காரணமாக மொத்தம் 32 ஆயிரத்து 818 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 4 ஆயிரத்து 952 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 486 பேருக்கும், ஈரோட்டில் 395 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பொறுத்தவரை 238 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.