தமிழகத்தில் புதிதாக 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி....

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 192 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது  

தமிழகத்தில் புதிதாக 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி....

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 88 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரேநாளில் ஆயிரத்து 423 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதேபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம், மொத்த உயிரிழப்பு 35 ஆயிரத்து 912ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு 14 ஆயிரத்து 570 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 150 பேரும், கோவையில் 130 பேரும், செங்கல்பட்டில் 87 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.