தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு கடந்த வாரம் வரை குறைந்து வந்த சூழலில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக ஆயிரத்து 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொற்று பாதிக்கப்பட்டோரில் இன்று 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 289ஆக அதிகரித்துள்ளது. 
 
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தோரில் ஒரே நாளில் ஆயிரத்து 839 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 286ஆக உள்ளது. சென்னையில் புதிதாக 194 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், கோவையில் 223 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.