தமிழகத்தில் இன்று 1,985 பேருக்கு கொரோனா உறுதி- 30 பேர் உயிரிழப்பு...

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு கடந்த வாரம் வரை குறைந்து வந்த சூழலில், தற்போது மீண்டும் இரண்டாயிரத்தை நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் இன்று 1,985 பேருக்கு கொரோனா உறுதி- 30 பேர் உயிரிழப்பு...

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 1,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,71,383 ஆக உள்ளது. இதற்கிடையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரில் இன்று 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,260ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தோரில் ஒரே நாளில் 1,908 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,185ஆக உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 25,16,938 ஆக உள்ளது. சென்னையில் புதிதாக 189 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், கோவையில் 239 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.