பழைய குருடி கதவை திறடி… மீண்டும் அதிகரிக்கும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்…  

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பழைய குருடி கதவை திறடி… மீண்டும் அதிகரிக்கும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்…   

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அரியலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், விழுப்புரம், தர்மபுரி, கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிபேட்டை,  விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்கள்  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளதாக தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பான அறிவிப்பை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா அலையின் தாக்கம் சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் 10 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளது.

கடந்த ஜூலை 23ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 471 ஆக இருநத கட்டுப்படுத்தப்பட்ட பகுதி, ஜூலை 30ம் தேதி 487 ஆக அதிகரித்துள்ளது.  அதில் அரியலூர், ராமநாதபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, கரூர், புதுக்கோட்டை விருதுநகர், தர்மபுரி, மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளதாகவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், அதிகபட்சமாக  சென்னையில் 102 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளதாகவும், அதேப்போல்,குறைந்தபட்சமாக காஞ்சிபுரம் மற்றும் திருப்பதூர் மாவட்டத்தில் 1 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.