அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழகத்தில் உள்ள மூன்று ஆயிரம் தொழு நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நாளை முதல் தொடங்கவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்  

அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 6 படுக்கை வசதியுடன் கூடிய கொரொனா சிறப்பு பிரிவு மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டி கலத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பாதித்து வந்த நிலையில் தற்போது தமிழக அரசு எடுத்து வர கூடிய தொடர் நடவடிக்கைகள் காரணமாக குறைந்து வருவதாக தெரிவித்தார்.

 தமிழகத்தில் இரண்டாம் அலையின் பாதிப்பு குறைந்து வந்தாலும் மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து வருவதால் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு  கொரோனா சிறப்பு மையம் பணிகள் தொடங்கி உள்ளதாக தெரிவித்த அவர் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 79 ஆயிரம் ஆக்சிசன் படுக்கைகள் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

 அதே போன்று தமிழகத்தில் துவங்கப்பட்ட மினி கிளினிக் மையத்தில் பணிபுரிந்து வந்த மருத்துவர்கள் கொரோனா சிறப்பு மையங்களில் பணியாற்றி வருகின்றனர் .தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5000 ஆயிரத்திற்கும் குறைவாக ஏற்படும் நேரத்தில் மீண்டும் மினி கிளினிக் செயல்படும் என்று தெரிவித்தார்.

 தமிழகத்திற்கு மொத்தமாக ஒரு லட்சத்து 22 ஆயிரம் வந்துள்ள நிலையில் அதில் 1 கோடியே 14 லட்சம் நபர்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்த அவர் இன்று மாலை 3 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வரவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் உள்ள மூன்று ஆயிரம் தொழு நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நாளை முதல் துவங்க உள்ளதாக கூறினார்.தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் இதுவரை 2382 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் 1111 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.