கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்!

கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. 

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே மாதம் 8 ஆம் தேதி தொடங்கியது. இதனிடையே,  மே 22 ஆம் தேதியுடன் விண்ணப்ப பதிவு நிறைவு பெற்றது. அதன்படி, 3,01,446 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதயடுத்து மே 25-ம் தேதி மாணவர்களின் தரவரிசை பட்டியல்  உயர்க் கல்விதுறையால் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர இருப்போருக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இதில் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து, ஜூன் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், ஜூன் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-ம் கட்ட கலந்தாய்வும் நடைபெற உள்ளது தொிவிக்கப்பட்டது.  

மேலும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22-ந்தேதி வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!